×

காதல் டார்ச்சர் கொடுத்து பிளஸ் 2 மாணவி கடத்தல் ஆட்டோ டிரைவருக்கு வலை செய்யாறு அருகே

செய்யாறு, நவ.10: காதல் டார்ச்சர் கொடுத்து பிளஸ் 2 மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம்(24), லோடு ஆட்டோடிரைவர். இந்நிலையில், பொன்னம்பலம் கடந்த ஓராண்டாக மாணவி பள்ளிக்கு செல்லும்போது காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், பொன்னம்பலத்தை கண்டித்துள்ளனர். இருப்பினும் பொன்னம்பலம் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் கடந்த ஜூன் மாதம் பொன்னம்பலத்தை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவியை, பொன்னம்பலம் தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக்கில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் இது குறித்து மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மாணவியையும், அவரை கடத்தி சென்ற பொன்னம்பலத்தையும் தேடி வருகிறார்.

The post காதல் டார்ச்சர் கொடுத்து பிளஸ் 2 மாணவி கடத்தல் ஆட்டோ டிரைவருக்கு வலை செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Tags : Web ,Seyyar ,
× RELATED துணிக்கடையில் புகுந்து வியாபாரி மீது...